திரும்பி பார்க்கிறேன்
முதன் முதலாய் உன் கண்களின் பார்வை
என்னில் விழுந்தபோது என்னுள் சில மாற்றம்
அதை திரும்பி பார்கிறேன்
சில்லென்ற தென்றலில் அலைவீசி ஆடிய
உன் கார்மேக கூந்தல்
குளிர்ந்த இரவில் ஒளிவீசிடும்
பிறைவடிவ நெற்றி
கடித்து பார்க்க சொல்லும்
உன் கூரிய மூக்கு
முத்தம் கேட்டு ஏங்கி நிற்கும்
உந்தன் பூவிதழ்கள்
மோகம் ததும்பி நிற்கும்
உன் கன்னம்
இத்தனை அழகையும் தாங்கிநிற்கும்
பௌர்ணமி நிலா போன்ற உன் முகம்
உன்னை பார்கிறேனா ரசிக்கிறேனா
என்ற அந்த தேடலுடன்
ஒரு நிமிடம் கண்மூடினேன்
அப்போதுதான் என்னில் தோன்றியது
நீ
எனக்காக பிறந்தவளோ என்று
அந்த ஒரு நிமிடத்தை திரும்பி பார்க்கிறேன்
I Love You My Cute Angel
ஆனந்த் கி லிங்கம்
No comments:
Post a Comment